நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாட்டை அமுல்படுத்துவது தொடர்பில் நாளை தீர்மானம்! செய்திகளின் தொகுப்பு
நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாட்டை அமுல்படுத்துவது தொடர்பில் நாளை புதன்கிழமை தீர்மானம் எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் நாளாந்தம் ஏற்படும் நிலைமையை ஆராய்ந்து, இந்த தீர்மானம் எட்டப்படும் என அவர் கூறினார்.
இதேவேளை, பிரதேச ரீதியில் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் பிரதேச சுகாதார அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது முக்கிய செய்திகளின் தொகுப்பு,