இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுடன் இணைந்து செயற்படும் அரச உயர் அதிகாரிகள்
அரச நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருக்கும் சில பிரதான அதிகாரிகள் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக அரச புலனாய்வு பிரிவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த அமைப்புகள் சம்பந்தமாக அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் அந்த அமைப்புகளுக்குக் கிடைப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி, சட்டமா அதிபர் திணைக்களம், துறைமுகம், விமான நிலையம், சுகாதார அமைச்சு உட்பட அரச நிறுவனங்களில் உள்ள உயர் அதிகாரிகளைத் திட்டமிட்டு அந்த அமைப்புகள் தமது நிலைப்பாடுகளுக்குள் ஈர்த்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இந்த அதிகாரிகளில் பேராசிரியர், பொறியியலாளர்கள், கணனி தொழில்நுட்பவியலாளர் உட்பட முக்கிய பதவிகளை வகிக்கும் நபர்களும் அடங்குவதாகவும் கூறப்படுகிறது.
இது நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் இடங்கள் மற்றும் அந்த முக்கிய இடங்களில் உயர் பதவிகளை வகிக்கும் நபர்கள் தொடர்பில் அரச புலனாய்வு பிரிவு, பயங்கரவாத விசாரணைப் பிரிவு, பொலிஸ் விசேட பணியகம், குற்றவியல் விசாரணை திணைக்களம் ஆகிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
