இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுடன் இணைந்து செயற்படும் அரச உயர் அதிகாரிகள்
அரச நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருக்கும் சில பிரதான அதிகாரிகள் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக அரச புலனாய்வு பிரிவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த அமைப்புகள் சம்பந்தமாக அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் அந்த அமைப்புகளுக்குக் கிடைப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி, சட்டமா அதிபர் திணைக்களம், துறைமுகம், விமான நிலையம், சுகாதார அமைச்சு உட்பட அரச நிறுவனங்களில் உள்ள உயர் அதிகாரிகளைத் திட்டமிட்டு அந்த அமைப்புகள் தமது நிலைப்பாடுகளுக்குள் ஈர்த்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இந்த அதிகாரிகளில் பேராசிரியர், பொறியியலாளர்கள், கணனி தொழில்நுட்பவியலாளர் உட்பட முக்கிய பதவிகளை வகிக்கும் நபர்களும் அடங்குவதாகவும் கூறப்படுகிறது.
இது நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் இடங்கள் மற்றும் அந்த முக்கிய இடங்களில் உயர் பதவிகளை வகிக்கும் நபர்கள் தொடர்பில் அரச புலனாய்வு பிரிவு, பயங்கரவாத விசாரணைப் பிரிவு, பொலிஸ் விசேட பணியகம், குற்றவியல் விசாரணை திணைக்களம் ஆகிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri