இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுடன் இணைந்து செயற்படும் அரச உயர் அதிகாரிகள்
அரச நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருக்கும் சில பிரதான அதிகாரிகள் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக அரச புலனாய்வு பிரிவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த அமைப்புகள் சம்பந்தமாக அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் அந்த அமைப்புகளுக்குக் கிடைப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி, சட்டமா அதிபர் திணைக்களம், துறைமுகம், விமான நிலையம், சுகாதார அமைச்சு உட்பட அரச நிறுவனங்களில் உள்ள உயர் அதிகாரிகளைத் திட்டமிட்டு அந்த அமைப்புகள் தமது நிலைப்பாடுகளுக்குள் ஈர்த்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இந்த அதிகாரிகளில் பேராசிரியர், பொறியியலாளர்கள், கணனி தொழில்நுட்பவியலாளர் உட்பட முக்கிய பதவிகளை வகிக்கும் நபர்களும் அடங்குவதாகவும் கூறப்படுகிறது.
இது நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் இடங்கள் மற்றும் அந்த முக்கிய இடங்களில் உயர் பதவிகளை வகிக்கும் நபர்கள் தொடர்பில் அரச புலனாய்வு பிரிவு, பயங்கரவாத விசாரணைப் பிரிவு, பொலிஸ் விசேட பணியகம், குற்றவியல் விசாரணை திணைக்களம் ஆகிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri