இஷாரா செவ்வந்தி தொடர்பில் இந்திய பொலிஸாரிடம் கோரிக்கை
கணேமுல்லை சஞ்சீவ கொலைவழக்கின் பிரதான சூத்திரதாரியான இஷாரா செவ்வந்தி, இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டும் தப்பிச் செல்லாதவாறு அனைத்து வழிகளும் மூடப்பட்டு, கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
தீவிர நடவடிக்கை
எனினும், அவர், படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது விசாரணையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து இந்திய அதிகாரிகளுக்கு இஷாரா செவ்வந்தி தொடர்பான விபரங்கள் வழங்கப்பட்டு, அவரைக் கைது செய்து நாடு கடத்துமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இதற்கிடையே இலங்கைக்குள்ளும் இஷாரா செவ்வந்தியைத் தேடும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் தீவிரமாக முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
You may like this...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri

நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு- இதெல்லாம் நடக்க காரணம் இவர்தானா? Manithan

பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri
