இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய நீலக்கல் பொய்யானதா?
இரத்தினபுரி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய நீலக் கல் கொத்தணி போலியான ஒரு கல் அல்ல என தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் தலைவர் திலத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அது மில்லியன் கணக்கான வருடங்களாக சேர்ந்த பெறுமதியான இரத்தினகல் கொத்தணி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல தசாப்தங்களாக தன்னால் சேர்த்து வைக்கப்பட்ட இரத்தினகல் தொடர்பான மற்றும் அனுபவத்தில் இது மிகப்பெரிய பெறுமதியான கல் என தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அதன் விலை தொடர்பில் அதன் உரிமையாளரே மதிப்பிட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
அதனை மதிப்பிடுவதற்கான எந்த உரிமையும் தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபைக்கு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2000 மில்லியன் டொலர் பெறுமதியானதென அதன் உரிமையாளர் கமகேயினால் கூறப்பட்டுள்ளது. எனினும் அதன் தன்மை, வகை மற்றும் நிறை தொடர்பான அறிக்கை வெளியிடும் நடவடிக்கை மாத்திரமே தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 7 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam
