சிங்கள தேசியவாதம் என்பது ஒரு நாயின் வால் மட்டுமல்ல - பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி
சிங்கள இனவாத தேசிய அரசியலின் நியாயத்தன்மை 2009 மே 19 ஆம் திகதி அன்று முடிவுக்கு வந்தது. தமிழ் ஆயுத தேசிய போராட்டம் தோற்கடிக்கப்படும் வரை சிங்கள தேசியவாதம் ஒரு சுதந்திர அரசியல் நிகழ்ச்சி நிரலாக மட்டுமே வாழ முடிந்தது என்பதே இதற்கு காரணம் என பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
மகிந்த ராஜபக்சவின் அரசியல் கணக்கில் பங்குதாரராக இருப்பதன் மூலம் சிங்கள இனவாத தேசிய அரசியல் அந்த வெற்றியை அடைந்தது. இதனால் சிங்கள தேசியவாதம் மகிந்த ராஜபக்ச சம்பாதித்த அரசியல் செல்வத்தின் ஒரு பகுதியாக மாற முடிந்தது.
2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் சிங்கள தேசியவாதிகள், ராஜபக்சவாதம் என்ற நாயின் வலை ஆட்டலாம் என நினைத்தனர். ஆனால் சிங்கள தேசியவாதம் என்பது ஒரு நாயின் வால் மட்டுமல்ல, அதன் வாலை மறைக்கும் ஒட்டுண்ணிகளின் குழு என பின்னர் தெரியவந்தது.
ராஜபக்சவின் அரசியல் 2015 ஆம் ஆண்டு அவப்பெயருக்கு உட்பட்ட போது அதனை மீட்கும் வலிமை சிங்கள இனவாத தேசியவாதத்திற்கு இருக்கவில்லை என்பது தெளிவாகியது.
மைத்ரி-ரணில் அரசாங்கத்தின் விரைவான சரிவு மற்றும் கோட்டாபய ராஜபக்சவின் மீட்பனின் உரையானது அக்டோபர் 2019 வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
சிங்கள இனவாத தேசியத்தின் கருத்தியல் இந்த வெற்றியில் ஒரு பங்கைக் கொண்டிருந்தது என்பது உண்மை.
ஆனால், சிங்கள தேசியவாததிற்கு தமிழ் பிரிவினைவாத போரை வெல்வது போன்ற தெளிவான மற்றும் அடையக்கூடிய குறிக்கோள் இதில் இருக்கவில்லை.
இந்த சூழ்நிலையில், சிங்கள இனவாத தேசியவாதம் நலின் டி சில்வாவின் குணதாச அமரசேகர போன்றவர்களிடம் இருந்து கல்விகற்ற உயர் முதலாளித்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அஜித் நிவாட் கப்ரால், நாலக கொடஹேவா போன்றவர்களிடம் சென்றுள்ளது.
தற்போது ராஜபக்ச குடும்பத்தினருக்கு தற்போது நலின் டி சில்வா மற்றும் குணதாச அமரசேகர ஆகியோரின் அறிவுசார் சிங்கள இனவாத தேசியவாதம் தேவையில்லை.
தேவைக்கு மாத்திரம் பயன்படுத்தக் கூடிய சிங்கள தேசியவாதிகளை கொண்ட அடிப்படை அவர்களிடம் இருக்கின்றது.
சீதா அரம்பேபோல போன்றவர்கள் கூட அதற்கு போதுமானவர்கள்.
சிங்கள தேசியவாதத்தின் அரசியல் தேனிலவு முடிந்துவிடவில்லை என்று யாராவது இன்னும் நினைத்தால், லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கு இன்னும் வரலாற்றுப் பங்கு உண்டு என நினைக்கும் டியூ. குணசேகர மற்றும் திஸ்ஸ விதாரண போன்றவர்களுடன் அவர்களை ஒப்பிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.