இளைஞர்களுக்கு ஆதரவாக தந்தைமார் களமிறங்கினால் பாரிய விளைவுகள் ஏற்படும்! எச்சரிக்கும் தந்தை ஒருவர்
இலங்கையில் எரிபொருள் வரிசையில் நின்ற 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
“அரசாங்கம் இதற்கு முன்னர் வாங்கிய அடியை போன்று அடுத்த அடி இருக்காது. பாரிய விளைவுகள் ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
போராட தயாராகும் தந்தைமார்
நாட்டில் இதுவரையில் இளைஞர், யுவதிகள் மாத்திரமே தங்கள் கோபத்தை வெளியிட்டுள்ளனர். எனினும் தந்தைமார் வீதிக்கு இறங்கி கோபத்தை வெளிப்படுத்தினால் என்ன நடக்கும் என அரசாங்கத்திற்கு இன்னமும் தெரியவில்லை.
நான் 3 பிள்ளைகளின் தந்தை. எங்கள் பொறுமையின் எல்லையை சோதித்து பார்க்க வேண்டாம் என அரசாங்கத்திடம் கூறிக்கொள்கிறோம்.
தந்தைமார் வீதிக்கு இறங்கினால் அது மரண அடியாத தான் இருக்கும். நாங்கள் அனைத்தையும் எங்கள் பிள்ளைகளுக்காகவே செய்கின்றோம்.
அரசாங்கத்திற்கு எச்சரிக்கை
இளைஞர், யுவதிகள் போன்று தந்தைகளுக்கு பொறுமை இல்லை. தந்தைகள் வீதிக்கு இறங்கினால் அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு ஒரு நேர உணவு சாப்பிட முடியாத நிலைமை ஏற்படும்.
எங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை கட்டியெழுப்ப முடியாத ஒரு மோசமான வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்” என அவர் அரசாங்கத்தை எச்சரிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam