சர்வதேசத்தை திசைதிருப்புவதா கோட்டாபயவின் நோக்கம்? - செய்திகளின் தொகுப்பு
நாட்டில் மீண்டுமொரு வன்முறை இடம்பெறாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக அரவ தலைவர் கோட்டாபய ராஜபக்ச சர்வதேசத்திற்கு வழங்கிய உறுதி மொழியை நிறைவேற்ற வேண்டுமாயின் முதலில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும்படி ஜே.வி.பி வலியுறுத்தியுள்ளது.
அதைவிடுத்து வழமைபோல சர்வதேசத்தைத் திசைதிருப்புவதற்காக வழங்கப்பட்ட உறுதிமொழியாகவே கோட்டாபய ராஜபக்சவின் இந்த அறிவிப்பும் மாறிவிடும் என்றும் அந்தக் கட்சி தெரிவிக்கின்றது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத், ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் கோட்டாபய ராஜபக்ச வெளியிட்ட கருத்து தொடர்பில் பதிலளித்தார்.
இது தொடர்பில் விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை இணைத்து வருகிறது இன்றைய மத்திய நேர செய்திகளின் தொகுப்பு,