அரசாங்கத்திலிருந்து விலகுகின்றாரா தயாசிறி ஜயசேகர? வெளியான தகவல்
அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கான எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
குருநாகலில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவேன்.
இதன்போது, அரசாங்கத்தின் மீது வைத்திருந்த எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றத்தை ஏற்படுத்தவில்லையா? என ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.
எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தனிநபர்கள் ஒருவழியாக பிரசாரம் செய்கிறார்கள். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் இன்னும் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுகிறோம்.
“ஏமாற்றம் இல்லை. நாங்கள் உருவாக்கிய அரசாங்கங்கள், நாங்கள் உருவாக்கிய ஜனாதிபதி. எனவே, பலவீனங்களைப் பாதுகாப்பதே நம்பிக்கையாகும்.அரசாங்கத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து அதனை முன்னோக்கி நகர்த்த வேண்டியதே எங்களின் கடமை என்றும் தெரிவித்துள்ளார்.