வடக்கு விவசாய பணிமனையில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் விசாரணை
வடக்கு விவசாய பணிமனை முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்ய மூவர் கொண்ட
விசாரணைக் குழுவை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா நியமித்துள்ளார்.
வடக்கு மாகாண விவசாய பணிப்பாளர் பணிமனையில் இடம்பெற்ற நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக ஆரம்ப புலனாய்வு விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த விசாரணை குழுவில் வட மாகாண சிறுவர் நன்னடத்தை அமைச்சின் கணக்காளர் விஷ்ணு, வடக்கு மாகாண விவசாய அமைச்சின் நிர்வாக அதிகாரி சாந்தசீலன், வடமாகாண விதை உற்பத்திக் கூட்டுறவு நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் சதீஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.