மின் தடையினால் ஏற்பட்டுள்ள பாரிய நட்டம்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
இலங்கை முழுவதிலும் நேற்றைய தினம் ஏற்பட்ட மின்சாரத் தடையினால் இலங்கை மின்சார சபைக்கு பாரியளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்க
மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஐந்து மணித்தியாலங்கள் ஏற்பட்ட மின்சாரத் தடையினால் சுமார் ஆறு பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மின்சாரத் தடை
இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட இந்த நட்டத்திற்கு தற்போதைய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரே பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் திகதியும் இதேவிதமாக மின்சாரத் தடை ஏற்பட்டதாகவும் இதனால் சுமார் 15 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், நேற்றைய தினம் ஏற்பட்ட மின்சாரத் தடையினால் நேரடியாக 6 பில்லியன் ரூபா நட்டமும், மறைமுகமாக 4 பில்லியன் ரூபா நட்டமும் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 3 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
