இஸ்ரேல் வேலை வாய்ப்பு குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையின் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.
இஸ்ரேலில் வேலை வாய்ப்புகள் இருப்பதாக உறுதியளிக்கும் எந்தவொரு வெளி தரப்பினருக்கும் பணம் கொடுக்க வேண்டாம் என்று அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, இந்த மோசடி குறித்து தகவல்கள் வெளியிட்டுள்ளார்.

உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பு
அமைச்சகத்தின் எச்சரிக்கையை மீறி பணம் செலுத்தியவர்கள் இஸ்ரேலில் எந்தவொரு உத்தியோகபூர்வ வேலை வாய்ப்புகளுக்கும் தகுதியற்றவர்களாக கருதப்படுவார்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இஸ்ரேலில் முறையான வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்டணங்கள் மட்டுமே தேவை என்று அமைச்சர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மாத்திரமே இந்தக் கட்டணங்களை வசூலிக்க அதிகாரம் பெற்ற ஒரே நிறுவனமாகும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
கார்க் தீவுக்கு குறி! முக்கிய வான்வழி படைத் தளபதிகள் மத்திய கிழக்கிற்கு அனுப்பும் அமெரிக்கா News Lankasri
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri