இரணைமடுகுளத்திற்கு கீழான விவசாயிகளிடம் அறவிடப்பட்ட நிதி தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை
கிளிநொச்சி (Kilinochchi) - இரணைமடுகுளத்தின் கீழான விவசாயிகளிடம் இருந்து அறவிடப்பட்ட பதினொரு மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட நிதி எந்த திணைக்கள அதிகாரிகளின் அனுமதியுமின்றி செலவிடப்பட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தின் பாரிய நீர்ப்பாசன குளமாகவும் கிளிநொச்சி மாவட்டத்தின் முதன்மையான விவசாய குளமாகவும் காணப்படுகின்ற இரணைமடு குளத்தின் கீழ் உள்ள விவசாயிகளிடமிருந்து கடந்த 2015ஆம் ஆண்டு - 2023ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அறவிடப்பட்ட கோடிக்கணக்கான நிதி எந்த திணைக்கள அதிகாரிகளின் அனுமதியுமின்றி செலவிடப்பட்டுள்ளதாக தகவலறியும் சட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டுள்ளது.
நிதி வைப்பு
அதாவது, கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் குறித்த நிதிகளை அறவிடுவதற்கு உரிய தீர்மானங்கள் மாவட்ட பயிர்செய்கை குழு கூட்டங்களிலே நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
அதனை செலவு செய்வதற்கு எந்த அனுமதிகளும் பெறப்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு சுமார் 11 மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட நிதி விவசாயிகளிடமிருந்து அறவிடப்பட்டிருக்கின்றது.
இவ்வாறு இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத்தினால் அறவிடப்பட்ட நிதியானது உரிய திணைக்களங்களின் அனுமதி பெறப்படாமல் வங்கிகளில் நிதி வைப்பு செய்யபடாமலும் முறையற்ற விதத்திலே செலவு செய்யப்பட்டிருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri
