ட்ரம்பின் எச்சரிக்கை - முக்கிய கடல் வழித்தடங்களை குறிவைத்துள்ள ஈரான்! ஈரானின் மூத்த ஆலோசகரின்அறிவிப்பு
உலகளாவிய எரிசக்தி கடத்தல் பாதைகள் குறித்து கடுமையான எச்சரிக்கையை ஈரானின் உச்ச தலைவரின் மூத்த ஆலோசகர் ஒருவர், வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேலும் பதற்றத்தை அதிகரித்தால், ஹோர்முஸ் நீரிணையைத் தாண்டியும் முக்கிய கடல் வழித்தடங்கள் இலக்காகக் கொள்ளப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை
மொஜ்தபா காமெனெய்க்கு ஆலோசகராக உள்ள அலி அக்பர் வெலாயதி, இரு நாடுகளில் ஏதாவது ஒன்று தவறான நடவடிக்கை எடுத்தாலே உலகளாவிய எரிசக்தி போக்குவரத்து மற்றும் சர்வதேச வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் அரசியல் கட்டுப்பாட்டில் உள்ள Press TV தகவலின்படி, “ஒற்றுமையான எதிர்ப்பு கட்டளை” பாப் அல்-மந்தெப் நீரிணையை, ஹோர்முஸ் நீரிணைக்கு இணையான முக்கியத்துவம் கொண்டதாகக் கருதுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல்கள், ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக திறக்காவிட்டால் ஈரானுக்கு எதிராக “பெரும் தாக்குதலை நடத்துவேன்” என்று ட்ரம்ப் எச்சரித்ததையடுத்து வெளியாகியுள்ளது.
ஈரான் எச்சரிக்கை
மேலும், அமெரிக்கா ஈரானின் வரலாற்றிலிருந்து சில பாடங்களை கற்றுக்கொண்டிருந்தாலும், “அதிகாரத்தின் புவியியல்” குறித்து இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை என வெலாயதி குறிப்பிட்டுள்ளார்.

யேமன் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள பாப் அல்-மந்தெப் நீரிணை, செங்கடல் கடலை (Red Sea) அடன் வளைகுடாவுடன் (Gulf of Aden) மற்றும் அரபிக் கடலுடன் இணைக்கும் முக்கிய கடல் வழித்தடமாகும்.
இது சூயஸ் கால்வாய் நோக்கிச் செல்லும் கப்பல்களுக்கு முக்கிய இடமாக விளங்குகிறது. ஈரானுடன் தொடர்புடைய யேமனின் ஹூதி இயக்கம், தேவையானால் இந்த கடல் வழித்தடத்தைத் தாக்க தயாராக உள்ளதாக முன்பே எச்சரித்துள்ளது.
காசாவில் இஸ்ரேல் நடத்தும் போரின்போது, செங்கடல் வழியாகச் செல்லும் கப்பல்களை குறிவைத்து ஹூதிகள் மேற்கொண்ட தாக்குதல்கள், சர்வதேச வர்த்தகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன.
நெதன்யாகுவின் அழுத்தத்தில் செயல்படும் ட்ரம்ப் - பேரழிவை நோக்கி செல்லும் வளைகுடா! ஈரான் பகிரங்க எச்சரிக்கை