திடீரென இருளில் மூழ்கிய ஈரானின் நாதன்ஸ் அணு உலை மையம் - இப்படிக்கு உலகம்
ஈரானின் நாதன்ஸ் அணு உலை மையம் நேற்று திடீரென இருளில் மூழ்கியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் நாதன்ஸ் நகரின் யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து காரணமாக ஆலையின் ஒரு பகுதி தீ பிடித்து எரிந்துள்ளதுடன்,மேலும் இந்த வெடி விபத்தால் ஆலையில் மின் விநியோகமும் தடைப்பட்டுள்ளது.
எனினும் இந்த விபத்தில் ஆலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என ஈரானின் சிவிலியன் அணுசக்தி திட்டத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
இச் செய்திகள் தொடர்பான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய இப்படிக்கு உலகம் தொகுப்பு,