ட்ரம்ப் - நெதன்யாகுவை கொலை செய்ய 58 மில்லியன் பரிசு அறிவிப்பு! ஈரானின் அதிரடி திட்டம்
ஈரான் நாடாளுமன்றம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரை கொலை செய்யும் நபர்களுக்கு 5 கோடி யூரோ (சுமார் 58 மில்லியன் அமெரிக்க டொலர்) பரிசுத் தொகை வழங்கும் மசோதாவை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கை குழுத் தலைவர் இப்ராஹிம் அசிசி, “இஸ்லாமியக் குடியரசின் இராணுவ மற்றும் பாதுகாப்புப் படைகளின் அதிரடி நடவடிக்கை” என்ற தலைப்பில் ஒரு புதிய மசோதா தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தொடரும் அதிரடி மாற்றங்கள்..! முதலமைச்சர் விஜயின் புதிய உத்தரவு - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
50 மில்லியன் யூரோ பரிசு
இந்த மசோதா மூலம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தலைவர்களை கொலை செய்பவர்களுக்கு 50 மில்லியன் யூரோ பரிசு வழங்கும் திட்டம் சட்டபூர்வமாக்கப்படலாம் என கூறப்படுகிறது.

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி தெஹ்ரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அந்நாட்டு உயர்ந்த தலைவர் அலி காமனெய் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்திற்குப் பதிலடி நடவடிக்கையாக இந்த மசோதா கொண்டு வரப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்ராஹிம் அசிசி கூறுகையில், ட்ரம்ப், நெதன்யாகு மற்றும் அமெரிக்க மத்திய கட்டளைப் படை (CENTCOM) தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் ஆகியோர் “காமனெய் படுகொலையில்” பங்கு கொண்டதாக குற்றம் சாட்டி, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஈரான் ஆதரவு
இதனுடன், தேசிய பாதுகாப்புக் குழுவின் மற்றொரு உறுப்பினரான மஹ்மூத் நபவியான், “ட்ரம்ப் மற்றும் நேதன்யாகுவை நரகத்துக்கு அனுப்புபவர்களுக்கு” பரிசு அறிவிக்கும் மசோதா விரைவில் வாக்கெடுப்புக்கு வரும் என கூறியுள்ளார்.
இதற்கு முன்பும், ஈரான் ஆதரவு ஊடகமான “மசாஃப்” (Masaf), “Kill Trump” என்ற பிரச்சாரத்திற்காக 50 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.

அதேபோல், ஈரானுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் “ஹண்டாலா” (Handala) என்ற சைபர் ஹேக்கிங் குழுவும், டிரம்ப் மற்றும் நேதன்யாகுவை “அழிக்க” 50 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.
அமெரிக்க நீதித்துறை அந்தக் குழுவினரைக் கைது செய்ய தகவல் தருபவர்களுக்கு 10 மில்லியன் டொலர் பரிசு அறிவித்ததற்கான பதிலடியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.
அரசியல் வட்டாரங்கள்
இந்த புதிய பரிசுத் திட்டம், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என சர்வதேச அரசியல் வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.

இதற்கிடையில், ஈரான் அமெரிக்காவுக்கு புதிய சமாதான முன்மொழிவை அனுப்பியுள்ளதாகவும், ஆனால் அது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து பெரிய மாற்றமில்லை என்று Axios செய்தி வெளியிட்டுள்ளது.
“நாங்கள் தற்போது எந்த முக்கிய முன்னேற்றத்தையும் காணவில்லை. நிலைமை மிகவும் தீவிரமாக உள்ளது. சரியான பதிலை வழங்க வேண்டிய அழுத்தம் ஈரான்மீது உள்ளது,” என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.