ஈரானின் அணு வசதி சேதம்: செயற்கைக்கோள் படங்களின் அதிர்ச்சி வெளிப்பாடு
ஈரானின் ஃபோர்டோ அணுமின் நிலையத்தின் மீதான அமெரிக்கத் தாக்குதலின் ஆழமாகப் புதைக்கப்பட்ட தளமும் அது வைத்திருந்த யுரேனியம் செறிவூட்டும் மையவிலக்குகளும் கடுமையாக சேதமடைந்து அழிக்கப்பட்டிருக்கலாம் என்பதை செயற்கைக்கோள் படங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ஆனால் இது தொடர்பிலான உறுதிப்படுத்தல் எதுதனையும் அணு ஆயுத நிபுணர்கள் வெளியிடவில்லை.
இந்த தாக்குதலுக்கு “மாசிவ் ஆர்ட்னன்ஸ் பெனட்ரேட்டர்” பதுங்கு குழியை தாக்கும் குண்டுகளை அமெரிக்கா பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
பதுங்கு குழியை உடைக்கும் குண்டுகள்
இதன்படி இவ்வாறான பதுங்கு குழியை உடைக்கும் குண்டுகள் மலைக்குள் ஊடுருவியதாகத் தோன்றும் ஆறு துளைகளை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
பின்னர் தரை கலங்கி, தூசியால் மூடப்பட்டதாகத் செயற்கைக்கோள் படங்கள் மூலம் காட்டப்படுகிறது.
ஆனால் நிலத்தடி அழிவை உறுதிப்படுத்த முடியவில்லை என்று செயற்கைக்கோள் படங்களில் நிபுணத்துவம் பெற்ற ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்கப் படைகள் நேற்று நடத்திய தாக்குதல்களில் இருந்து ஈரான் அதன் அணுசக்தித் திட்டத்தின் பெரும்பகுதியை பாதுகாக்க ஃபோர்டோவில் உள்ள ஒரு மலையின் நிலத்தடியில் ஆழமாக புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் தெஹ்ரானின் அணுசக்தி திட்டத்தை நிறுத்த விரும்புவதாகக் கூறியுள்ளன.
ஆயுதத் திட்டம்
ஆனால் அதன் வசதிகள் மற்றும் உபகரணங்களை முற்றிலுமாக அழிக்கத் தவறினால், அமெரிக்க உளவுத்துறை மற்றும் ஐ.நா. சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) 2003 இல் மூடப்பட்டதாகக் கூறும் ஆயுதத் திட்டத்தை ஈரான் எளிதாக மீண்டும் தொடங்க முடியும்.
இந்நிலையில் ஈரான் நீண்ட காலமாக தனது அணுசக்தி திட்டம் அமைதியான நோக்கங்களுக்காகவே என்று வலியுறுத்தி வருகிறது.
எனினும் ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் தெஹ்ரானின் நடான்ஸில் உள்ள முக்கிய யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தையும் குறிவைத்ததாகவும், நாட்டின் மிகப்பெரிய அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இஸ்ஃபஹானைத் தாக்கியதாகவும் அமெரிக்கா கூறி வருகிறது.
எவ்வாறாயினும் ஈரானுடனான 10 நாள் போரில் இஸ்ரேல் ஏற்கனவே நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் அணு ஆராய்ச்சி மையத்தைத் தாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
