ஹோர்முஸ் நீரிணையில் பற்றியெரிந்த கப்பல்! இஸ்ரேல் கப்பல் மீது ஈரான் அதிரடி ட்ரோன் தாக்குதல்
ஹோர்முஸ் நீரிணையில் பயணம் செய்து கொண்டிருந்த இஸ்ரேலுடன் தொடர்புடைய வணிகக் கப்பல் ஒன்றின் மீது ஈரான் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானின் புரட்சிகர காவல்படை கடற்படைத் தளபதியை மேற்கோள் காட்டி வெளியான இந்தச் செய்தியில், இந்தத் தாக்குதலால் அந்தப் பெரிய கப்பல் தீப்பிடித்து எரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை
இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்தோ அல்லது இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தோ இஸ்ரேல் தரப்பிலிருந்து இதுவரை உடனடித் தகவலோ அல்லது அதிகாரப்பூர்வ கருத்தோ தெரிவிக்கப்படவில்லை.

உலகளாவிய எரிபொருள் போக்குவரத்திற்கு மிக முக்கியமான பாதையாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையில் நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல், ஏற்கனவே பதற்றமாக உள்ள மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.
பின்னணி பாடகி சுஜாதாவிற்கு ஏற்பட்ட சோகம்.. 20,000 பாடல்கள் பாடியவருக்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri