இஸ்ரேலை தாக்கிய ஈரானிய இராணுவம் தொடர்பில் வெளியான தகவல்
கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஈரான் முன்னோடியில்லாத வகையில் நேரடித் தாக்குதலை நடத்தியமைக்கு ஈரானின் அதியுயர் தலைவர் அயத்துல்லா சையத் அலி உசைனி காமெனி (Sayyid Ali Hosseini Khamenei) பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
ஈரானிய இராணுவத் தளபதிகளுடனான சந்திப்பின்போதே அவர் ஒரு வாரத்திற்குப் பிறகு ஆயுதப் படைகளின் வெற்றியை பாராட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரேலில் மிதமான சேதம்
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஈரானால் ஏவப்பட்ட பெரும்பாலான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகள் சுட்டு வீழ்த்தின. குறித்த தாக்குதல் இஸ்ரேலில் மிதமான சேதத்தை ஏற்படுத்தியது.

எத்தனை ஏவுகணைகள் ஏவப்பட்டன, அவற்றில் எத்தனை அவற்றின் இலக்கைத் தாக்கின என்பது முதன்மையான கேள்வி அல்ல, உண்மையில் முக்கியமானது என்னவென்றால், அந்த நடவடிக்கையின் போது ஈரான் தனது சக்தியை வெளிப்படுத்தியது.

சமீபத்திய நடவடிக்கையில், ஆயுதப் படைகள் செலவுகளைக் குறைத்து ஆதாயங்களைப் பெருக்க முடிந்தது. இராணுவ அதிகாரிகள், இராணுவ கண்டுபிடிப்புகளை இடைவிடாமல் தொடரவும், எதிரியின் தந்திரங்களைக் கற்றுக்கொள்ளவும் வேண்டும்.
சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரானிய துணைத் தூதரகத்தின் மீது ஏப்ரல் 1 அன்று இஸ்ரேலிய தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்பட்டது, இதில் இரண்டு IRGC ஜெனரல்கள் கொல்லப்பட்டனர் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam