ஹோர்முஸ் நீரிணையில் அதிரடியாக துப்பாக்கிச்சூடு நடத்திய ஈரான்! பேச்சுவார்த்தைகள் கைகூடாத நிலையில் தொடரும் பதற்றம்
ஈரானின் துணை ராணுவப் படையான புரட்சிகரக் காவலர்கள், ஹோர்முஸ் நீரிணையில் ஒரு கொள்கலன் கப்பல் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் கப்பல் சேதமடைந்ததுடன், பாகிஸ்தானில் திட்டமிடப்பட்ட போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் கைகூடாத நிலையில், பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை
பிரித்தானிய இராணுவத்தின் ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக செயல்பாட்டு மையம் (UKMTO) தெரிவித்ததின்படி, இன்று(22) புதன்கிழமை காலை 7.55 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கப்பல் எந்தவித எச்சரிக்கையும் பெறாமல் கார்டு படகால் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் UKMTO தெரிவித்துள்ளது.
Fars News Agency மற்றும் Tasnim News Agency ஆகிய ஈரான் அரசுக்கு நெருக்கமான ஊடகங்களும் இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளன.
அவை UKMTO தகவல்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன. Fars News, ஹோர்முஸ் நீரிணையில் தனது கட்டுப்பாட்டை ஈரான் “சட்டப்படி செயல்படுத்துகிறது” எனவும் தெரிவித்துள்ளது.
போக்குவரத்துக்கு முக்கிய பாதை
இந்த நீரிணை பாரசீக வளைகுடாவுக்கான முக்கிய நுழைவாயிலாகும். உலகின் சுமார் 20% எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இந்த வழியாக சென்றது எனக் கூறப்படுகிறது. எனினும், ஹோர்முஸ் நீரிணை சர்வதேச கடல் வழியாகவே கருதப்படுகிறது.
இது ஈரான் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளின் கடல் எல்லைகளுக்குள் இருந்தாலும், உலக கப்பல் போக்குவரத்துக்கு முக்கிய பாதையாக உள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம், கடந்த வார இறுதியில் அமெரிக்க கடற்படையினர் ஒரு ஈரான் கப்பலை கைப்பற்றியதையும், இந்தியப் பெருங்கடலில் ஈரானின் எண்ணெய் வர்த்தகத்துடன் தொடர்புடைய ஒரு எண்ணெய் கப்பலில் ஏறிச் சோதனை செய்ததையும் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது.
மேலும், பாகிஸ்தானில் நடைபெறவிருந்த போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடைபெறாத நிலையில், இந்த சம்பவம் மத்திய கிழக்கு பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan