இஸ்ரேல் மீதான வான்வழித் தாக்குதலுக்கு முன் ஈரான் நடத்திய அதி விசேட தாக்குதல்
இஸ்ரேல் தலைநகரை தாக்குவதற்கு முன் ஈரான் சைபர் தாக்குதல் மூலம் இஸ்ரேல் நகரங்களில் மின்சாரத்தை இழக்க செய்துள்ளதாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த நூற்றாண்டின் மிக சிறந்த திட்டமிட்ட தாக்குதலாக, ஈரானின் இந்த தாக்குதலை படைத்துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலை மீதான தாக்குதலின் சூத்திரதாரியாக ஈரான் இருந்தாலும் ஈராக்,சிரியா மற்றும் லெபனான் இணைந்து இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதனால் 180 பாகையில் இஸ்ரேல் தனது பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதேநேரம் ஈரானிடம் இருந்து ஜோர்டான்,பிரித்தானிய,பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்தே இஸ்ரேலை பாதுகாத்தது என கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 6 நாட்கள் முன்
சிறைச்சாலை மோதல்கள்! உயர் அதிகாரிகளுக்கு இடையில் முக்கிய கலந்துரையாடல் - எடுக்கப்படும் அதிரடி நடவடிக்கைகள்
காலி கடற்பரப்பில் குவிந்துள்ள 16 ஈரானிய கப்பல்களால் சர்ச்சை.. இலங்கைக்கு காத்திருக்கும் பாரிய ஆபத்து