சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் பிணையில் விடுவிப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி அம்பன் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 6 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பௌர்ணமி மற்றும் ஞாயிறு விடுமுறை தினமான கடந்த 24ஆம் திகதி மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் நேற்று (01.04.2024) தலா ஒரு இலட்சம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மணல் சுமைகள் விற்பனை
இந்நிலையில் விடுவிக்கப்பட்ட உழவு இயந்திர சாரதிகள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக குடத்தனை அம்பன் ஊர் எல்லை பகுதியிலிருந்து அம்பன் கிழக்கிலுள்ள ஒவ்வொருவரது வீட்டு வாசல்களிலும் வெடிகளை கொழுத்தியுள்ளனர்.
இதேவேளை கடந்த 24ஆம் திகதி காலை 6 மணிக்கு ஆரம்பமான மணல் அகழ்வில்
100க்கு மேற்பட்ட மணல் சுமைகள் உழவு இயந்திரங்களில் ஏற்றப்பட்டு அவை விற்பனை
செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





6 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

குணசேகரன் மற்றும் அவரது அம்மா திட்டத்தை தெரிந்துகொண்ட ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல் அடுத்த அதிரடி புரொமோ Cineulagam

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan
