மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அழைப்பை நிராகரித்த அமைச்சர்(Photos)

Human Rights Commission Of Sri Lanka Tiran Alles Ministry Of Public Security
By Parthiban.A Mar 16, 2023 09:59 AM GMT
Parthiban.A

Parthiban.A

in சமூகம்
Report

மாணவர்கள் தமது உரிமைகளுக்காக முன்னெடுத்த பல போராட்டங்களுக்கு எதிரான பொலிஸ் வன்முறைகள் தொடர்பான விசாரணைக்குத் தகவல் வழங்க மறுத்த பொது பாதுகாப்பு அமைச்சருக்கு அழைப்பாணை அனுப்பியதை ஏற்றுக்கொள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பின்வாங்கியுள்ளது.

மார்ச் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் கொழும்பு மற்றும் களனிப் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை அடக்குவதற்காக, 'பொலிஸார் செயற்பட்ட விதம் குறித்து விசாரணை நடத்துவதற்கு' அமைச்சர் டிரான் அலஸை அழைத்ததாக ஆணைக்குழு மார்ச் 9ஆம் திகதியன்று சிங்களத்தில் அறிவித்திருந்தது.

எனினும் நான்கு நாட்களுக்குப் பின்னர் அது அழைப்பாணை அல்ல, 'விளக்கத்திற்கான கோரிக்கை' என ஆங்கிலத்தில் வெளியிட்ட அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அழைப்பை நிராகரித்த அமைச்சர்(Photos) | Invitation To The Minister Of Public Security

அழைப்பாணை

“இதற்கமைய இந்தப் போராட்டங்களை ஒடுக்க பொலிஸ் அதிகாரிகள் கடைப்பிடித்த நடைமுறைகள் குறித்து விளக்கமளிப்பதற்காக பொதுப் பாதுகாப்பு அமைச்சின் அமைச்சராகக் கடமையாற்றும் அமைச்சர் டிரான் அலஸ் கடந்த 13.03.2023 அன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்” என மார்ச் 9ஆம் திகதி ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் சிங்களத்தில் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அழைப்பிற்கு அமைய அமைச்சர் ஆணைக்குழுவிற்குச் செல்லவில்லை...

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆங்கிலத்தில் அறிவித்தல் ஒன்றை விடுத்து, இலங்கையில் வசிக்கும் எந்தவொரு நபரையும் சாட்சியமளிப்பதற்கும் ஆவணங்களை வழங்குவதற்கும் ஆணைக்குழுவுக்கு அழைப்பதற்கான 'முழுமையான அதிகாரம்' இருந்தாலும், அமைச்சர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டதாக வெளியான செய்திகள் பொய்யானவை எனக் குறிப்பிட்டுள்ளார்.

"இந்த நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது, தனது செயலாளரின் ஊடாகச் செய்தது என்னவெனில், இலங்கை பொலிஸுக்குப் பொறுப்பான அமைச்சரை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வந்து சில விளக்கங்களை வழங்குமாறு கோருவதுதான். சிங்களத்தில் வெளியிடப்பட்ட 'அழைப்பாணை' மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆங்கிலத்தில் 'கோரிக்கையாக' மாற்றப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அழைப்பை நிராகரித்த அமைச்சர்(Photos) | Invitation To The Minister Of Public Security

அறிவிப்பு

அதற்குச் சவால் விடுத்த பொலிஸக்குப் பொறுப்பான அமைச்சர் டிரான் அலஸ், விசாரணைக்காக அங்குச் செல்லப் போவதில்லை என பகிரங்கமாக அறிவித்திருந்தார். “ஊடகங்களில் வெளியாகும் பொய்யான அறிக்கைகளைத் தெளிவுபடுத்தவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது” என ஆங்கிலத்தில் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டிரான் அலஸை ஆணைக்குழுவிற்கு அழைப்பது தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த மார்ச் 9ஆம் திகதி சிங்கள மொழியில் வெளியிட்ட அறிவிப்பு ஆங்கிலத்தில் வெளியிடப்படவில்லை என்பதோடு, மார்ச் 13ஆம் திகதி ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பு சிங்களத்தில் வெளியிடப்படாமல் இருப்பதையும் உறுதி செய்துள்ளது.

அந்த அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்பும் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை...

முன்னாள் தலைவர் அமைச்சருடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் எதிர்வரும் 13ஆம் திகதி முன்னிலையாகப்போவதில்லை எனத் தீர்மானித்த பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், உரிய முறைமையின் கீழ் உரிய அழைப்பாணை விடுக்கப்படாத காரணத்தினால் அங்குச் செல்வதில்லை எனத் தீர்மானித்ததாக ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அழைப்பை நிராகரித்த அமைச்சர்(Photos) | Invitation To The Minister Of Public Security

மனித உரிமைகள் ஆணைக்குழு

மேலும், மனித உரிமை மீறல் சம்பவமொன்றில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முதலில் செய்ய வேண்டியது, அதற்குப் பொறுப்பான அரச நிறுவனத்தின் அதிகாரிகளின் ஊடாக அறிக்கையொன்றைப் பெற்று ஆராய்வதே எனவும் மாறாக அந்த விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரை அழைப்பதல்ல எனவும் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் சட்டத்தரணியுமான பிரதிபா மஹாநாமஹேவா ஊடகங்களுக்குக் கூறியிருந்தார்.

போராட்டங்களைக் கலைப்பது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு முதலில் செய்திருக்க வேண்டியது, பொது பாதுகாப்புக்குப் பொறுப்பான அமைச்சரை அழைப்பது அல்ல, அதற்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளரிடம் அறிக்கை கோருவதுதான் எனக் கலாநிதி மஹாநாமஹேவா தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்ட நாட்களில் (ஒவ்வொரு துறையும் தனித்தனியாக) போராட்டத்தைக் கட்டுப்படுத்த களத்தில் பணியாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் பட்டியலை, 2023 மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்புமாறு 09 மார்ச் 2023 அன்று பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதாகவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பெயர் பட்டியல் கிடைக்கப்பெற்றதா என்பதை ஆணைக்குழுவோ அல்லது அதன் தலைவியும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான ரோஹினி மாரசிங்கவோ பகிரங்கப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGallery
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, மானிப்பாய்

06 Jul, 2014
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

02 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வல்வெட்டித்துறை

16 Jul, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Markham, Canada

28 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, London, United Kingdom

03 Jul, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

02 Jul, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US