யாழ்.இளைஞன் மீது பொலிஸாரின் கொடூர தாக்குதல்:விசாரணைகள் ஆரம்பம்
யாழ்.சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் இளைஞன் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூர தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேசத்தில் நடைபெற்ற திருட்டு சம்பவம் ஒன்றினை அடுத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
எனினும் அங்கு கொடூரமான முறையில் தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் அவசர சிகிச்சைக்காக கடந்த 28ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
பொலிஸாருக்கு எதிரான விசாரணைகள்
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது பொலிஸார் தம்மை கொடூரமாக தாக்கியதாக இளைஞன் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்.
குறித்த இளைஞனைப் பரிசோதித்த மருத்துவர்கள், பொலிஸாரின் தாக்குதலினால் அவரது விலா மற்றும் முதுகெலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்கு எதிரான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.





ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
