கிளிநொச்சியில் தனியார் ஆடைத் தொழிற்சாலையில் சட்டவிரோத செயல் : விசாரணைகள் ஆரம்பம்
கிளிநொச்சியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையில் கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்டதாக கூறப்படும் நிலையில் அவை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் மூலம் சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி நீதவான் ஜமீல் உட்பட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
இதேவேளை தனியார் நிறுவன வளாகத்தில் குறித்த செய்தியை காட்சிப்படுத்த ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |