மூத்த பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்திய விசாரணை
மூத்த பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து லஞ்ச ஊழல்களுக்கு எதிரான ஆணைக்குழு விசாரணையை ஆரம்பித்துள்ளது.
அரசுக்குச் சொந்தமான செய்தித்தாள் இதனை தெரிவித்துள்ளது.
ஆய்வு செய்யவும் ஆணைக்குழு
இதன்படி, ஆரம்ப கட்டத்தில் பொலிஸ் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றில் உள்ள உயர் அதிகாரிகளின் சொத்து அறிவிப்புகள் மற்றும் பதிவுகள் மதிப்பாய்வு செய்யப்படும்,

பின்னர் கீழ்நிலை அதிகாரிகளுக்கு விசாரணை விரிவுபடுத்தப்படும்.
மேலும் சிறைச்சாலைகள் திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் குடிவரவு மற்றும் குடிவரவுத் துறையுடன் இணைக்கப்பட்ட அதிகாரிகளின் சொத்து கோப்புகளை ஆய்வு செய்யவும் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், மூத்த பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு குறித்த விசாரணையானது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam