மக்களுக்கு எழுந்துள்ள சந்தேகம்! பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பு
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
சட்டவிரோத செயல்
பொலிஸாருக்கு வழங்கப்படும் தகவல்கள் குற்றவாளிகளுக்கும் சட்டவிரோத செயல்களைச் செய்பவர்களுக்கும் கிடைப்பதாக மக்களுக்கு சந்தேகம் இருப்பதால் இந்த தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, தகவல் அளிப்பவர் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் பொலிஸாருக்கு தகவல்களை வழங்குவதற்காக, பொலிஸ் தலைமையகம் 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த அவசர தொலைபேசி இலக்கம் குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸாருக்கு அறிவிக்க அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
