லண்டனிலிருந்து வந்த தமிழ் பெண் படுகொலை! - சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் (Photo)
கிளிநொச்சியில் லண்டனிலிருந்து திரும்பிய பெண் ஒருவர் கொலைசெய்யப்பட்டமை தொடர்பில் கைதாகிய கனவன் மனைவி இருவரையும் எதிர்வரும் 12ம் திகதி வரையும் விளக்க மறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
நேற்று முந்தினம் 26ம் திகதி கொலை செய்யப்பட்ட குறித்த பெண்ணின் உடலம் உறவினர்களிடம் நேற்று (29-1-2021) கையளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த கொலையுடன் தொடர்புடைய 22 வயதுடைய இளைஞன் மற்றும், துணைபுரிந்த அவரது மனைவி இருவரும் நேற்று மாலை மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன் போது குறித்த இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 12.01.2022 வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி...
லண்டனில் இருந்து வந்த தமிழ் பெண் சடலமாக மீட்பு! - விசாரணைகள் தீவிரம்







