அரசாங்கத்திற்கு சர்வதேசத்தின் உதவி கிடைக்காது:ராஜித
சர்வதேசத்தின் உதவியை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பதவி விலகி, சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்திடம் இருந்து நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது. அத்துடன் அரசாங்கத்திற்கு சர்வதேசத்தின் உதவியும் கிடைக்காது.
இலங்கையின் தற்போதைய அரசாங்கம் திருட்டு அரசாங்கம் என்பதை முழு உலகமும் ஏற்றுக்கொண்டுள்ளது.
இதற்கு தீர்வாக கோட்டாபயவையும் ரணிலையும் அனுப்பி விட்டு, சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும். நாட்டில் நல்லாட்சி ராஜதந்திரத்தை ஏற்படுத்துவதற்காக சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் எனவும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam