மனித உரிமைகள் விருது வழங்கும் விழா (Photos)

United for Human Rights London Tamil diaspora
By DiasA Dec 20, 2022 11:52 PM GMT
Report

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) உலக மனித உரிமைகள் தினம் 2021 நிகழ்வு இலண்டனில் நடைபெற்றது.

உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் சபை அறிமுகப்படுத்திய 74வது ஆண்டு நிறைவையிட்டு, மனித உரிமைகள் தினத்தை நினைவுகூருவதோடு இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகவும் உலகெங்கிலுமுள்ள அனைத்து இனத்தினருக்கு எதிராகவும் இழைக்கப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை நினைவு கூர்ந்து அவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கவும் சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தவும் TIC யினால் ஆண்டுதோறும் மனித உரிமைகள் தின நிகழ்வு நடத்தப்பட்டு வருகின்றது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரிக்கான நீதி தேடல்

அதன்படி TIC யின் இவ்வாண்டுக்கான மனித உரிமைகள் தின நிகழ்வு, இலண்டனில் சட்டன் (Sutton) பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. இந்த வருட நிகழ்வுகள் “ வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரிக்கான நீதி தேடல்” (Justice For Enfored Disappearance in Sri Lanka) என்ற தலைப்பில் இடம்பெற்றன.

மனித உரிமைகள் விருது வழங்கும் விழா (Photos) | International For Human Rights London

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் ஐ.நா. நிபுணரும், பேராசிரியரும் அமெரிக்க சட்ட வல்லுனருமான பேராசிரியர் அல்பிரட் மொறைஸ் டீ சயாஸ் (Prof Alfred-Maurice de Zayas), இலண்டன் பல்கலைக்கழகத்தின் (University of London - SOAS) சர்வதேச மனித உரிமைகள் சட்டதுறை பேராசிரியர் லூட்ஸ் ஓட்டே (Prof Lutz Oette), வெஸ்மினிஸ்டர் பல்கலைக்கழகத்தின் சட்டதுறை பேராசிரியர் ராதா டி சோய்சா (Prof Radha D’Souza), ஐனநாயகம் ஊடாக அமைதிக்கான விதவைகள் அமைப்பின் (Widows for Peace through Democracy) தலைவரும் வழக்குரைஞரும் மகாராணியின் சிறப்பு பட்டம் பெற்றவருமான மாகிரட் ஓவண் (Magret Owen OBE), பிரான்ஸ் தமிழ் மனித உரிமைகள் அமைப்பின் (TCHR) நிறுவனரும் செயலாளர் நாயகமுமான திரு. ச. வி. கிருபாகரன், சட்டன் பகுதி கவுண்சிலர் குமார் சகானத்தன், ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன் அரசியல் தலைவர்கள், மத தலைவர்கள், ஏனைய தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், தமிழ் தகவல் நடுவம் மற்றும் சமூக அபிவிருத்தி மையத்தின் (CCD)யின் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

ஆவணப்படம்

மங்களவிளக்கேற்றல் மற்றும் தமிழ் தாய் வாழ்த்து நடனத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதான சிறப்புரையினை ஜனநாயக மற்றும் சமமான சர்வதேச ஒழுங்கை மேம்படுத்துவதற்கான ஐ.நா.வின் முன்னாள் நிபுணர் பேராசிரியர் அல்பிரட் மொறைஸ் டீ சயாஸ் Alfred-Maurice de Zayas நிகழ்த்தினார்.

மனித உரிமைகள் விருது வழங்கும் விழா (Photos) | International For Human Rights London

அதனை தொடர்ந்து இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் எதிர்நோக்கும் நாளாந்த பிரச்சினைகள், நீதிக்கான போராட்டம் மற்றும் அச்சுறுத்தகள் என்பவற்றை எடுத்துக்காட்டும் முகமாக, சர்வதேச விருதுபெற்ற திரைப்பட இயக்குனரான கண்ணன் அருணாச்சலம் அவர்களால் வெளியிடப்பட்ட, அனந்தி சசிதரன் அவர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் “இலங்கையில் போராளியின் மனைவி” (Sri Lanka, Rebels Wife) என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது.

மனித உரிமைகள் விருது வழங்கும் விழா

அதனைத் தொடர்ந்து ஏனைய சிறப்பு அதிதிகளின் உரைகள் இடம்பெற்றதுடன், இலங்கையில் இடம்பெற்ற மாபெரும் மனித உரிமை மீறலை சித்தரிக்கும் சித்தரிக்கும் குறியீட்டு நடாகம் ஒன்றும் மெய்வெளி நாடகக்குழுவினரால் அரங்கேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து, TIC யினால் ஆண்டுதோறும் வழங்கப்படும் மனித உரிமைகள் விருது வழங்கும் விழாவும் இடம்பெற்றது.

TIC யின் நிறுவுனர்களில் ஒருவரும் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளருமான காலம்சென்ற உயர்திரு வைரமுத்து வரதகுமார் அவர்களின் ஞாபகார்த்த விருது (Varadhakumar Memorial Award 2022) இம்முறை பேராசிரியர் லூட்ஸ் ஒட்டே (Prof Lutz Oette) அவர்களுக்கு வழங்கப்பட்டது.

அவர் கடந்த காலங்களில் TIC உடன் இணைந்து மேற்கொண்ட இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆய்வுப்பணிக்கும், இலங்கையில் இடம்பெறும் இனப்படுகொலை தொடர்பாக அவர் எழுதிய நூலுக்காகவும் (The International Crime of Genocide: The Case of Tamil People) அவருக்கு இந்த விருது வழங்கி கொளரவிக்கப்பட்டது.

மனித உரிமைகள் விருது வழங்கும் விழா (Photos) | International For Human Rights London

இலங்கையில் இடம்பெறுவது “இனப்படுகொலை” என்பதை முதன் முதலில் சட்டரீதியாக நிறுவிய இந்த ஆய்வு நூலை 1998 மார்ச் மாதம் TIC வெளியீடு செய்திருந்தது. தனது ஏற்புரையில், இலங்கை இனப்படுகொலையை நிரூபிப்பதில் உள்ள சட்ட மற்றும் அரசியல் சிக்கல்கள் பற்றி அவர் எடுத்துரைத்தார்.

இந்த வருடத்துக்கான முதலாவது மனித உரமைகள் விருது (TIC Human Rights Award 2022) 30 வருடமாக அயராத மனித உரிமைகள் மற்றும் ஊடக பணிக்காக, மனித உரிமைசெயற்பாட்டாளர் மதிப்பிற்குரிய ச. வி. கிருபாகரன் அவர்களுக்கு வழங்கி கொளரவிக்கப்பட்டது. அவர் தனது ஏற்புரையில் தனது நீண்டகால இடைவிடாத மனித உரிமைகள் பணியில் தான் சந்தித்த சவால்கள் பற்றி எடுத்துரைத்தார்.

அதேபோல இரண்டாவது மனித உரிமைகள் விருது, நீண்ட கால சமூக சேவைக்கும் அர்ப்பணிப்புக்குமாக, TICயின் மூத்த பணிப்பாளர்களில் ஒருவரும், 1983 இனக்கலவரத்தின் போது சிறையில் படுகொலை செய்யப்பட்ட வைத்திய கலாநிதி இராஜசுந்தரம் அவர்களின் சகோரதரரான சோமசுந்தரம் கனகசுந்தரம் அவர்களுக்கும் வழங்கி கொளரவிக்கப்பட்டது.

இவர்களை வைத்திய கலாதிநி தேவா நாதன் அவர்கள் அறிமுகம் செய்துவைக்க, TIC பணிப்பாளர்கள் விருதுகளை வழங்கி வைத்தனர். இறுதியாக TIC யின் செயற்பாட்டாளர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டு, நிகழ்வு மிகச்சிறப்பாக நிறைவுபெற்றது.

Gallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம்

15 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், தையிட்டி, வண்ணார்பண்ணை

14 Dec, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, புளியங்கூடல், வண்ணார்பண்ணை

11 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், உரும்பிராய்

06 Dec, 2023
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

28 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, இந்தியா, British Indian Ocean Terr., தெஹிவளை

12 Dec, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, கொழும்பு, London, United Kingdom

08 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு

24 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US