இராமநாதன் கல்லூரியில் இடம்பெற்ற சர்வதேச சூழல் தினம்..!
மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் சர்வதேச சூழல் தினமும், சர்வதேச நீர் தினப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பும் நடைபெற்றது.
கல்லூரியின் பிரதி முதல்வர் சதயாளன் தலைமையி மிகவும் விமர்சையாக நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
சர்வதேச சூழல் தினம்
சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் பிதம விருந்தினராக எந்திரி.வீ. ஜே.தொய்வேந்திரா கலந்துகொண்டு பல்வேறு சூழல் சார் கருத்துக்களை வழங்கினார்.
விழாவில் விருந்தினர்களாக எதிர்காலத்திற்குரிய சுற்றுச்சூழல் கழக செயலாளர் ம.சசிகரன், மாவட்ட சுற்றாடல் முன்னேடி ஆலோசகர் ப.அருந்தவம், மத்திய சுற்றாடல் அதிகாரா சபையின் உடுவில் பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர் ரூபினி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் மாணவர்களின் சுற்றுச் சூழல் தொடர்பான ஆற்றுகைகளும் இடம்பெற்றன.







