பிரித்தானியாவில் மோசமடையும் பணவீக்கம்! - மூன்றாவது முறையாக வட்டி வீதம் அதிகரிப்பு
பிரித்தானியாவில் பணவீக்கமானது மேலும் அதிகரிக்க கூடும் என பேங் ஒப் இங்கிலாந்து (The Bank of England) எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நீடித்துள்ள நிலையில், பிரித்தானியாவில் எரிபொருள் விலை சடுதியாக அதிகரித்துள்ள பின்னணியில் பணவீக்கம் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரித்தானியாவில் பணவீக்கமானது அடுத்த மாதமளவில் 8 வீதமாக உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பேங் ஒப் இங்கிலாந்து (The Bank of England) நான்கு மாதங்களில் மூன்றாவது முறையாக வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது.
வங்கி அதன் வட்டி விகிதத்தை 0.25 சதவீத புள்ளிகள் அதிகரித்து 0.75% ஆக உயர்த்தியுள்ளது. எரிசக்தி கட்டணங்கள் மற்றும் உணவு செலவுகள் அதிகரித்து வருகின்ற நிலையில், உக்ரைன் - ரஷ்ய போர் காரணமாக மேலும் விலைகளை உயரக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
You My Like This Video
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 19 மணி நேரம் முன்
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam