நாட்டில் தீவிரமடையும் கறுப்பு சந்தை வியாபாரம்! பொது மக்கள் மிகுந்த அவதானம்
நாட்டில் பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்து வரும் நிலையில்,மறுபுறம் கறுப்பு சந்தை வியாபாரமும் உருவாகி வருவதாக பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் புலனாய்வு பிரிவினர் அவதானம் செலுத்த வேண்டும் என்று அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிப்பதற்கு முன்னரே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால்மாவின் விலையை 150 ரூபாவால் அதிகரித்துள்ளதாகவும், சமையல் எரிவாயுவை 5000 ரூபாவிற்கு விற்பனை செய்யும் கறுப்பு சந்தைகளும் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்,பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு பின்னால் தீவிரமாக செயற்பட்டு வரும் கறுப்பு சந்தை குறித்து புலனாய்வு பிரிவினர் அவதானம் செலுத்துவதில்லை என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
எனவே பொது மக்கள் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam
