தேசிய தேர்தல்கள் ஆண்டினையொட்டி திறைசேரியினால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
இந்த ஆண்டு தேசிய தேர்தல்கள் நடைபெறவிருப்பதால், அனைத்து அமைச்சக செயலாளர்கள் துறை மற்றும் பிற அரசு நடத்தும் நிறுவன தலைவர்களுக்கு செலவுகளை கட்டுப்படுத்துமாறு திறைசேரியினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரவிருக்கும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு இது தொடர்பாக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக திறைசேரியின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதன்படி, மூலதனச் செலவினங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை, பொருட்கள் மற்றும் உபகரணங்களை விநியோகிப்பதற்கோ அல்லது தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நிதி உதவி மற்றும் கடன் வழங்குவதற்கோ பயன்படுத்தக் கூடாது என திறைசேரி உத்தரவிட்டுள்ளது.
சுற்றறிக்கையின் வழிகாட்டுதல்கள்
மேலும், அமைச்சகத்தின் ஒப்புதலுடன் ஏற்பாடு செய்யப்பட்ட திட்டங்களை மட்டுமே அரச நிறுவனங்களுக்கு தொடர முடியும்.

இந்நிலையில், சுற்றறிக்கையில் பயணச் செலவுகள், சேவைச் செலவுகள், வாகனங்களின் பராமரிப்பு, உள்ளூர் பயிற்சி, வெளிநாட்டுப் பயணம், கட்டிடக் கட்டுமானம், கட்டிட வாடகை, திட்டங்களைச் செயல்படுத்துதல் மற்றும் முன்பணம் செலுத்துதல் ஆகியவை தொடர்பில் வழிகாட்டுதல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri
திறப்பு விழா நாளில் ஜனனிக்கு ஏற்பட்ட நெருக்கடி, எப்படி சமாளிக்க போகிறார்.... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்தியாவிலேயே அதிகபட்ச விலை.. துரந்தர் ஓடிடி உரிமை வாங்கிய நெட்பிலிக்ஸ்! புஷ்பா 2 சாதனையை தகர்த்தது Cineulagam