வெலிக்கடை சிறைச்சாலையில் சிசிடிவி கமராக்கள் நிறுவும் பணி தீவிரம்
வெலிக்கடை சிறைச்சாலையில் சிசிடிவி கமராக்களை நிறுவும் பணி தற்போது நடைபெற்று வருவதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள மூன்று சிறைச்சாலைகளில் மட்டும் ஏற்கனவே சிசிடிவி கமரா அமைப்பு பொருத்தப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலையில், அண்மையில் மேற்கொண்ட சம்பவங்களின் பின்னணியில், சிசிடிவி கமராக்களின் அவசியம் தொடர்பில் வலியுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தன.
இதன்போதே வெலிக்கடை அல்லது அனுராதபுரம் சிறைச்சாலையில் தற்போது இந்த அமைப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது சிசிடிவி கமராக்கள், அகுணுகொலபெலஸ்ஸ, பூஸ்ஸ மற்றும் களுத்துறை சிறைச்சாலைகளில் மட்டுமே உள்ளன.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெலிக்கடை சிறைச்சாலை, விளக்கமறியல் சிறைச்சாலை, வெலிக்கடை பெண் வோர்ட், சிறை மருத்துவமனை, மஹார மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலைகளில் சிசிடிவி கமராக்கள் நிறுவப்படுவதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.