அம்பாறையில் காட்டு யானையொன்று உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை
அம்பாறை (Ampara) - பொத்துவில் - விக்டர் ஏத்தம் பிரதேச வீதி ஓரத்தில் காட்டு யானையொன்று உயிரிழந்திருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது இன்று (17) காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த காட்டு யானை உட்பட சில யானைகள் அந்தப் பகுதிகளில் நடமாடி திரிந்ததை அவதானித்ததாக பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பிரேதப் பரிசோதனை
குறித்த யானையானது மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில், பிரேதப் பரிசோதனை நடைபெறவுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பொத்துவில் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக இந்தப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான யானைகள் வருகை தந்த வண்ணம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan
