மலையக பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள்: ஒப்பந்தம் கைச்சாத்து
பெருந்தோட்டப் பாடசாலைகளில் 60 ஸ்மார்ட் வகுப்பறைகளை நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சகத்தின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா(Santosh Jha) ஆகியோருக்கு இடையே நேற்று(16) இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானது.
இந்த நாட்டின் பெருந்தோட்ட சமூகத்தில் உள்ள டிஜிட்டல் இடைவெளியைக் குறைப்பதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் வகுப்பறைகள்
அதன்படி, நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் உள்ள பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு இந்த ஸ்மார்ட் வகுப்பறைகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தோட்டப் பாடசாலைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவது இதன் மற்றொரு நோக்கமாகும்.
இதற்காக இந்திய அரசாங்கம் 508 மில்லியன் ரூபா மானிய உதவியை வழங்கியுள்ளதுடன் இலங்கை அரசாங்கமும் இந்த ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கு 115 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri
