சுரேஷ் சாலேவுக்காக குரல் கொடுக்கும் நாமல் ராஜபக்ச
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவுக்கு அநீதி இழைக்கப்படக் கூடாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் இட்டுள்ள பதிவில்,
திடீர் மௌனம்
சுரேஷ் சாலே ஒரு நீதவானின் விளக்கமறியல் உத்தரவின் கீழ் அல்லாமல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
The reports now emerging in the media, along with the concerns raised before court by the legal counsel of Major General (Retd.) Suresh #Sallay regarding his treatment in custody, are deeply troubling.
— Namal Rajapaksa (@RajapaksaNamal) June 7, 2026
Sallay is not under a magistrate’s remand order but is detained under the…
இங்கு ஆச்சரியமளிக்கும் விடயம் என்னவென்றால், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு எதிராகப் பல வருடங்களாகக் குரல் கொடுத்து வந்த செயற்பாட்டாளர்களின் தற்போதைய மௌனமாகும்.
அவர்களின் இந்தத் திடீர் மௌனம், கொள்கை மற்றும் முரண்பாடற்ற தன்மை குறித்த கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே நம் விருப்பமாகும்; ஆனால் அந்த நீதி எந்தவொரு பக்கச்சார்பும், அரசியல் செல்வாக்கும் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பயன்பாடும் இன்றி வழங்கப்பட வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
உண்மையை நோக்கியதாக இல்லாமல், அரசியல் உள்நோக்கத்துடன் விசாரணைகள் நடத்தப்பட்டால், அது இன்னமும் உண்மையான நீதியை எதிர்பார்த்திருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் இழைக்கப்படும் துரோகமாக முடிந்துவிடும் அபாயத்தைக் கொண்டுள்ளது.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை அதன் கண்டுபிடிப்புகளைத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டியுள்ளதுடன், அலட்சியப்போக்கிற்கு தனிப்பட்ட ரீதியில் பொறுப்பானவர்களையும் அடையாளம் கண்டுள்ளது.
முரண்பாடான விடயம் என்னவென்றால், அந்த கண்டுபிடிப்புகளுடன் தொடர்புடைய சில நபர்களே தற்போது இந்த விசாரணைகளை வழிநடத்துகிறார்கள்.
எதிர்க்கட்சி என்ற வகையில் நாங்கள் விசாரணைகளுக்கு எதிரானவர்கள் அல்லர். பொறுப்புக்கூறல் என்பது முக்கியமானது; ஆனால் அரசியல் உள்நோக்கம் கொண்ட விசாரணைகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒருபோதும் உண்மையான நீதியை வழங்காது.
இதுவே எனது நேர்மையான கருத்தாகும் என்றும் நாமல் ராஜபக்ச தனது பதிவில் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.