வடக்கு மாகாணத்தில் வீதி ஒழுக்கத்தை பேண பொலிஸாரின் புதிய செயற்றிட்டங்கள்
வடக்கு மாகாணத்தில் (Northern Province) வீதி ஒழுக்கத்தை பேணுவதற்கு பொலிஸார் பல புதிய செயற்றிட்டங்களை ஆரம்பித்துள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் சி.ஏ.தனபால தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஓட்டுநர்களுக்கும் பாதசாரிகளுக்கும் விழிப்புணர்வினை ஏற்படுத்துதல், அடையாளம் காணப்பட்ட இடங்களில் புதிய போக்குவரத்து அறிகுறி பலகைகளை நிறுவுதல் மற்றும் வாகன நிறுத்தங்களை கட்டுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அத்துடன், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகளும் செயற்படுத்தப்பட்டுள்ளன.
பொலிஸாரின் நோக்கம்
வடமாகாணத்தை அதிகபட்சமாக வீதி ஒழுக்கத்தை பேணும் மாகாணமாக மாற்றுவதே பொலிஸாரின் நோக்கமாகும் என வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
