இஸ்ரேல் இராணுவம் செய்த மனிதாபிமானமற்ற செயல்
காயமடைந்த பாலஸ்தீனியர் ஒருவரை ஜீப் வாகனத்தில் கட்டியவாறு இஸ்ரேலிய (Israel) படையினர் குழுவொன்று மேற்கொண்ட மனிதாபிமானமற்ற செயல் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாலஸ்தீனத்தின் (Palestine) மேற்குக்கரை நகரமான ஜெனினில் இராணுவ நடவடிக்கையின் போது இடம்பெற்ற இந்த சம்பவத்தை காட்டும் காணொளி சமூக வலைதளங்களில் பரவியது.
வெளியான காணொளி
இந்நிலையிலேயே, குறித்த நடவடிக்கையில் ஈடுபட்ட இஸ்ரேலிய படையினர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த செயலில் ஈடுபட்டது ஒரு சந்தேக நபராக இருந்தாலும் கூட, காயமடைந்த நபருக்கு அவர் மேற்கொண்ட செயலை மன்னிக்க போவதில்லை என இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri