வவுனியாவில் மின்தடை தொடர்பில் வெளியான தகவல்
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக வவுனியாவில் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை (19 காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை வவுனியா மாவட்டத்தில் சில பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படும்.
வவுனியா பிரதேசத்தில் நெளுங்குளம் நீர் வழங்கல் சபை, அறுகம் புல்வெளி, ஆசிகுளம், பாரதிபுரம், கூமாங்குளம், கூமாங்குளம் கிருஷ்ணாமெடி கிளினிக், கூமாங்குளம் சாய் சிறுவர் இல்லம், நாகரிலுப்பைக்குளம், நெளுக்குளம் கலைமகள் பாடசாலையடி, நொச்சிக்குளம், அவுசதப்பிட்டிய பகல அளுத்வத்த, பாண்சின்னகுளம்,
பொன்னாவரசங்குளம், புபுதுகம, இராஜேந்திரகுளம், சாம்பல்தோட்டம்
வீட்டுத்திட்டம், விநாயகபுரம் வீட்டுத்திட்டம் ஆகிய பிரதேசங்களிலும்
மின்சாரம் தடைப்படவுள்ளது என இலங்கை மின்சார சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது .
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 7
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 5 நாட்கள் முன்
43 வயதில் செம கிளாமர் போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை கவரும் நடிகை விஜயலட்சுமி... வீடியோவுடன் இதோ Cineulagam