கொழும்பில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்
கொழும்பில் நேற்று சில பகுதிகளில் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில் கொலன்னாவ எண்ணெய்க் களஞ்சிய வளாகத்திற்கு அருகில் உள்ள கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்தவர் கொலன்னாவ மீதொட்டமுல்ல பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் என தெமட்டகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் மதுபானத்திற்கு அடிமையானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவும் அவர் மதுபானம் அருந்திய நிலையில், கால்வாயில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
உயிரிழந்த நபரின் பிரேத பரிசோதனை இன்றைய தினம் நடைபெறவுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
சடலம் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெமட்டகொட பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடும் நெருக்கடியில் இலங்கை! - சீனாவிடம் உதவி கேட்ட கோட்டாபய (பத்திரிக்கை கண்ணோட்டம்) |
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 22 மணி நேரம் முன்
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam