அடுத்த மாதம் மீண்டும் எரிபொருள் விலை திருத்தம்..! வெளியான அறிவிப்பு
உலகச்சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்த போதிலும், கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் எரிபொருள் விலையை நிலையாக வைத்திருக்க அரசாங்கம் பெரும் மானியம் வழங்கி வருவதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்துள்ளார்.
சமீபத்திய எரிபொருள் விலை திருத்தம் மற்றும் உலகச்சந்தை விலைகள் தொடர்பாக, நேற்று (03) இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட இரகசிய ஆயுதக்கிடங்கு! இளம் தம்பதியினர் தலைமறைவு - அவசர உதவிகோரும் பொலிஸார்
உலகச்சந்தையில் எரிபொருள் விலை
உலகச்சந்தையில் எரிபொருள் விலை குறைந்திருக்கும் நிலையில், நாட்டில் விலையை உயர்த்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து சமூகத்தில் விவாதம் கிளம்பி வருகின்றது.

நாட்டில் சில தரப்பினர் அரசியல் ஆதாயத்திற்காகவோ அல்லது உண்மைகளைப் பற்றிய அறியாமையின் காரணமாகவோ தரவுகளைத் திரித்து, பொதுமக்களைத் தவறாக வழிநடத்துகின்றனர்.
ரஷ்ய-உக்ரைன் போர் வெடித்ததைத் தொடர்ந்து, உலகச்சந்தையில் டீசல் விலை வேகமாக அதிகரித்தது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக, பெப்ரவரியில் 88 டொலராக இருந்த சராசரி விலை, ஏப்ரல் மாதத்தில் 190 டொலராக (115% அதிகரிப்பு) உயர்ந்தது. சில நாட்களில், அது 291 டொலர் என்ற சாதனை உச்சத்தை எட்டியது என்றும் சுட்டிக்காட்டினார்.
எரிபொருள் விலையை நிலையாக வைத்திருக்க, கடந்த காலத்தில் அரசாங்கம் ஒரு பெரிய மானியத்தை வழங்கியுள்ளது. ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ. 100 செலவை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
விலை திருத்தம்
மேலும் இதற்காகச் செலவழிக்கப்பட்ட மொத்தத் தொகை ரூ. 57 பில்லியன் ஆகும். இந்த நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்திருந்தால், எரிபொருள் விலை உயர்வால் போக்குவரத்து மற்றும் பிற பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்து, ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் சரிந்திருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய மானிய முறை இந்த மாதத்துடன் முடிவடைவதால், விலை திருத்தம் அவசியம். உலகச் சந்தை விலை தற்போது 148 டொலராகக் குறைந்திருந்தாலும், அது போருக்கு முந்தைய விலையை விட சுமார் 179% அதிகமாகவே உள்ளது. எண் தரவுகளைக் கருத்தில் கொண்டால், டீசலின் உலக விலை 179.8% அதிகரித்துள்ளது, ஆனால் உள்ளூர் விலை 148% மட்டுமே அதிகரித்துள்ளது.
பெட்ரோலின் உலகச் சந்தை விலை 172% அதிகரித்திருந்தாலும், உள்ளூர் விலை 148% மட்டுமே அதிகரித்துள்ளது.
இந்தத் தரவுகளின்படி, உலகச் சந்தை விலையின் உயர்வை விட உள்ளூர் விலை இன்னும் குறைவாகவே உள்ளது என்பது தெளிவாகிறது என்றும் விளக்கமளித்துள்ளார்.
அரச வங்கி ATM இயந்திரத்திற்கு கொண்டுவரப்பட்ட கோடிக்கணக்கான பணம் கொள்ளை - CCTV குறித்து வெளியான தகவல்
சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! Manithan
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri