உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் பெப்ரல் அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்
தேர்தல் செலவீனங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் இன்று (19.01.2023) நிறைவேற்றப்பட்டால், அதன் மூலம் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை என்ற பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதற்கான குறிப்பிட்ட கால அவகாசம் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதைக் கொண்டு இந்த எதிர்வை அவர் வெளியிட்டுள்ளார்.
தேர்தல் செலவினங்கள்
தேர்தல் செலவீனங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தை இன்று (19.01.2023) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள நாடாளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை 10.30 மணி முதல்மாலை 5 மணி வரை விவாதம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
