அதிருப்திகளை புரிந்து கொள்வாரா வைத்தியர் அர்ச்சுனா

Parliament of Sri Lanka Ramanathan Archchuna
By Rukshy Feb 06, 2025 07:00 PM GMT
Report
Courtesy: Nixon

உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் நிகழ்த்தும் உரைகள் தொடர்பாக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என ஊடகவியலாளர் அ.நிக்ஸன் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் அது அவர்களின் சிறப்புரிமை. ஆனால், தவறான தகவல்கள் மற்றும் பொய்க் குற்றச்சாட்டுக்களை உயர் அரச அதிகாரிகள் மீதோ அல்லது அமைச்சர்கள் ஏனைய உறுப்பினர்கள் மீதோ சுமத்த முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

புங்குடுதீவு வித்தியா படுகொலை வழக்கில் புதிய திருப்பம்

புங்குடுதீவு வித்தியா படுகொலை வழக்கில் புதிய திருப்பம்

அதிகாரி மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்கள்

மேலும், உரிய தகவல்கள் அடங்கிய ஆவணங்களை சபாநாயகரிடம் சமர்ப்பித்து, சம்மந்தப்பட்ட உயர் அரச அதிகாரி மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உறுப்பினர் ஒருவர் சபாநாயகரிடம் கோரலாம் .

அதிருப்திகளை புரிந்து கொள்வாரா வைத்தியர் அர்ச்சுனா | Information Regarding Speeches Members Parliament

அது அந்த உறுப்பினருடைய சிறப்புரிமை. ஆனால், முன்வைக்கப்பட்ட தகவல் தவறாக இருந்தால், அந்த அதிகாரி மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஹன்சாட் அறிக்கையில் இருந்து நீக்கம் செய்யப்படும்.

அந்த பொய்க் குற்றச்சாட்டுப் பற்றி மற்றொரு உறுப்பினர் சபாநாயகரிடம் ஒழுங்குப் பிரச்சினையாக எழுப்பி சுட்டிக்காட்டினால் மாத்திரமே ஹன்சாட் அறிக்கையில் இருந்து உடனடியாக அது நீக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஊடகங்களிலும் அக்குற்றச்சாட்டுக்களை வெளியிட முடியாத நிலை ஏற்படும்.

ஆகவே, நாடாளுமன்ற நிலையியற் கட்டளை விதிகளின் தந்தையான ஏர்ஸ்கின்மே (Erskine May) உருவாக்கிய விதிகளின் பிரகாரம் உரிய ஆதாரம் இல்லாமல் எந்த ஒரு உறுப்பினரும் எந்த ஒரு அரச உயர் அதிகாரிகள் மீதும் குற்றம் சுமத்த முடியாது.

பொறுப்பற்ற உரைகள் 

உறுப்பினர் ஒருவருக்குரிய சிறப்புரிமையின் பிரகாரம் அவருடைய உரைகளில் குறிப்பிடப்படும் விடயங்களை உறுப்பினர்கள் தவிர்ந்த வெளியில் உள்ள உயர் அரச அதிகாரிகளோ அல்லது பொதுமக்களோ கேள்விக்கு உட்படுத்த இயலாது என்ற ஒரு காரணத்துக்காக, ஆதாரமற்ற – பொறுப்பற்ற உரைகளை நிகழ்த்த முடியாது.

இதனை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் புதிய உறுப்பினர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். வட பகுதியில் மருத்துவ மாபியாக்கள் உருவெடுக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

அதிருப்திகளை புரிந்து கொள்வாரா வைத்தியர் அர்ச்சுனா | Information Regarding Speeches Members Parliament

ஆனால், இப்படியான ஆதாரமற்ற மற்றும் தனிப்பட்ட ரீதியில் ஓரிருவர் மீது காழ்ப்புணர்வுடன் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் மருத்துவ மாபியாக்களை காப்பாற்றுவதாகவே அமைந்து விடும்.

அதேநேரம், Mental Disorder (மன நலக் கோளாறு) என்று ஒரு உறுப்பினர் மற்றொரு உறுப்பினரைப் பார்த்து நாடாளுமன்றத்தில் கூற முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், உடனடியாக மற்றொரு உறுப்பினர் ஒழுங்குப் பிரச்சினையாக எழுப்பி சபாநாயகரிடம் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். அல்லது மருத்துவர் அர்ச்சுனா அதனை உடனடியாக சுட்டிக்காட்டி இவ்வாறு கூறியதற்கு மருத்துவ ஆதாரம் உள்ளதா என்று வினவியிருக்க வேண்டும்.

நாடாளுமன்றத்துக்கு வெளியில் நிகழ்த்தும்...

ஆனால், அர்ச்சுனா மீதுள்ள அதிருப்தியில் எந்த ஒரு உறுப்பினர்களும் இவ்வாறு கோரவில்லை.

எனினும் நிலையியற் கட்டளை விதிகளின் பிரகாரம் அந்த வார்த்தை ஆபத்தானது. இருந்தாலும், உறுப்பினர் ஒருவர் அதுவும் சிங்கள உறுப்பினர் ஒருவர் அவ்வாறு ஆவேசமாகச் சொல்லியிருக்கிறார் என்றால், அது தனது நடத்தைக் கோளாறுதான் காரண - காரியம் என்பதை அர்ச்சுனா புரிந்துகொள்ள வேண்டும்.

அதிருப்திகளை புரிந்து கொள்வாரா வைத்தியர் அர்ச்சுனா | Information Regarding Speeches Members Parliament

ஆகவே, ஏதாவது அரசியல் கொள்கை இருக்க வேண்டும். அல்லது கொள்கையே இல்லாமலும் இருக்கலாம். ஆனால் நடத்தையிலும் பேச்சிலும் நாகரிகம் இருக்க வேண்டும்.

எனினும், உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்துக்கு வெளியில் நிகழ்த்தும் எந்தவொரு ஆதாரமற்ற உரைகள் - குற்றச்சாட்டுகள் தொடர்பாகச் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் ஊடகவியலாளர் நிக்ஸன் குறிப்பிட்டுள்ளார்.

அர்ச்சுனாவின் முகப்புத்தக பதிவை கேலி செய்த அமைச்சர்

அர்ச்சுனாவின் முகப்புத்தக பதிவை கேலி செய்த அமைச்சர்

படைக்கல சேவிதரைக் கொண்டு சபையிலிருந்து வெளியேற்றுவேன்! அர்ச்சுனாவை எச்சரித்த பிரதி சபாநாயகர்

படைக்கல சேவிதரைக் கொண்டு சபையிலிருந்து வெளியேற்றுவேன்! அர்ச்சுனாவை எச்சரித்த பிரதி சபாநாயகர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரியபளை, கல்கிசை, கனடா, Canada

13 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, Pickering, Canada

20 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில்

19 Nov, 2009
மரண அறிவித்தல்

இறுப்பிட்டி, திருவையாறு

17 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarbrough, Canada

19 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

30 Nov, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை, கல்வியங்காடு

17 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bangkok, Thailand, Canberra, Australia

16 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Sinsheim, Germany

29 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

19 Oct, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, கரணவாய் மேற்கு

09 Dec, 2007
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

உடுவில், Vancouver, Canada, Scarborough, Canada

15 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

28 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், திருகோணமலை, Randers, Denmark

30 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US