வாக்குச் சீட்டுகள் குறித்து அரச அச்சகத் திணைக்களம் தகவல்
10 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் ஏற்கனவே அச்சிடப்பட்டு விட்டதாகவும், சில மறைகரங்கள் காரணமாக அச்சிடல் பணிகள் மந்தமாக உள்ளதாகவும் அரச அச்சகத் திணைக்களத்தின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
நேற்றைய தினம் (18.02.2023) அரச அச்சக ஊழியர் சங்கத்தின் செயலாளர் அசங்க சந்தருவன் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 12ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இன்னும் வாக்குச் சீட்டுகளை அச்சடிக்கப்பட்டு வருகின்றன. வாக்குச் சீட்டுகளை அச்சடிப்பதற்கு இவ்வளவு நேரம் எடுத்ததில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்குச் சீட்டு
அத்துடன், அச்சிடுவதற்கு போதுமான பொருட்கள், தேவையான உபகரணங்கள் மற்றும் பயிற்சி பெற்ற
பணியாளர்கள் திணைக்களத்திடம் இருப்பதாகத் தெரிவித்த சந்தருவன்,
தேர்தலைத் தாமதப்படுத்தும் நோக்கில், வாக்குச் சீட்டு
அச்சிடுவதைத் தாமதப்படுத்தும் வகையில், சில மறைகரங்கள் காரணமாக அச்சகத்தின்
மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பது வெளிப்படையானது என்று அவர் குற்றம்
சுமத்தியுள்ளார்.

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
