ரித்திகல தொல்பொருள் தளத்திற்கான உலக பாரம்பரிய அந்தஸ்தை பெற ஆவணம் தயாரிப்பு
ரித்திகல தொல்பொருள் தளத்திற்கான உலக பாரம்பரிய அந்தஸ்தைப் பெறுவதற்கான பொருத்தமான ஆவணங்கள் இப்போது தயாரிக்கப்பட்டு வருவதாக இலங்கை மத்திய கலாசார நிதியின் பணிப்பாளர் பேராசிரியர் காமினி ரணசிங்க (Gamini Ranasinghe) தெரிவித்துள்ளார்.
இவற்றை பூர்த்தி செய்தவுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வரலாற்று ரித்திகல தொல்பொருள் தளம், உலக பாரம்பரிய நகரங்களான அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவைக்கு இடையில் அமைந்துள்ளது.
சிகிரியாவில் இருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில், உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் பல்வேறு தட்பவெப்ப நிலைகளுடன் சுமார் 750 மீட்டர் உயரத்தில் ரித்திகல மலைத்தொடர் அமைந்துள்ளது.
9 ஆம் நூற்றாண்டு காலத்தில், சுற்றுச்சூழல் நிலைக்கு ஏற்ப தியானம் செய்யும் துறவிகளுக்காக கட்டப்பட்ட மடாலய வளாகம் இந்த இடத்தின் முக்கிய தொல்பொருள் பாரம்பரியமாகும்.
ரித்திகலயில் உள்ள அடர்ந்த காட்டுக்குள் கல் அடுக்குகளால் செய்யப்பட்ட உலாவும் மற்றும் இயற்கை சுற்றுச்சூழல் அம்சங்களைப் பயன்படுத்தி மிகவும் கவர்ச்சிகரமான கட்டுமானங்கள் உள்ளன. அத்துடன் கி.மு 2- 3 நூற்றாண்டுகளில் துறவிகள் வாழ்ந்த சில குகைகளும் அங்கு உள்ளன.