அநுராதபுரத்தில் பணம் பறிக்கும் கும்பல்: சிசிரீவியில் சிக்கிய சந்தேகநபர்கள்
அநுராதபுரம் - மரதன்கட, கணேவல்பொல நகரில் உள்ள கடைகளில் பணம் பறிக்கும் கும்பல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், குறித்த பகுதியில் உள்ள கடையொன்றில், இரகசிய கண்காணிப்பு கருவியில் சந்தேகத்திற்கு இடமான கும்பலின் பணம்பறிக்கும் செயற்பாடு பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், காலை 11.00 மணியளவில் கடைக்கு வந்த நபர் ஒருவர் தொலைபேசி வசதி மூலம் பணப்பரிமாற்றம் செய்து சென்றுள்ளார்.

முக்கிய ஆதாரங்களுடன் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் வெளியிடும் தகவல்கள் (Video)
உரிமையாளர் மீது மிரட்டல்
இதன்பின்னர், ஒன்றரை மணி நேரம் கழித்து கடைக்குள் நுழைந்த கும்பல், பணத்தை மாற்றிக் கொடுத்தவர் போதைப்பொருள் வியாபாரி என்று கூறி தொலைபேசி கடையின் உரிமையாளரை மிரட்டியுள்ளனர்.
பின்னர் சம்பவம் பதிவாகாமல் இருக்க கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிரீவி கேமரா அமைப்பை செயலிழக்க வைக்குமாறு கடை உரிமையாளருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், இது தொடர்பான போதைப்பொருள் கடத்தலில் கடை உரிமையாளருக்கும் தொடர்பு இருப்பதாகவும், இந்நிலையில் அவரிடம் 6,000 ரூபாய் தருமாறும் உரிமையாளரை மிரட்டியுள்ளனர்.
அதன்படி, சம்பந்தப்பட்ட தொலைபேசி கடையின் உரிமையாளர் கும்பலின் கோரிக்கைக்கு அமைய பணத்தை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

NEW பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 44 நிமிடங்கள் முன்

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
