இலங்கையில் கை, கால், வாய் தொடர்புடைய நோய்களில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு
இலங்கையில் அண்மைய நாட்களாக, கை, கால் மற்றும் வாய் தொடர்புடைய நோய்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக பாடசாலை மாணவர்களிடையே இந்த நோய்கள் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வைரஸ் தொற்றுகள், குறிப்பாக, குளிர் காலமான நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் அதிகமாகப் பரவும் என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
பிற நோய்களிலும் அதிகரிப்பு
இந்த நோய் ஏற்பட்ட சிறுவர்களின் கைகள், கால்கள் அல்லது வாயில் சிறிய சிவப்பு அல்லது வெள்ளை கொப்புளங்கள், பழுப்பு நிற செதில்களுடன் கூடிய சிவப்பு சொறி அல்லது வெளிப்புற கைகளில் சொறி போன்ற அறிகுறிகள் தென்படும்.
இந்தநிலையில், குறித்த அறிகுறிகள் தென்பட்டால், ஏனையோருக்கு நோய்ப்பரவலை தடுக்கும் முகமாக, குறித்த சிறுவர்களை 3 அல்லது 4 நாட்கள் வரை வீட்டில் வைத்திருக்குமாறு தீபால் பெரேரா பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், சிகிச்சைகளுக்கு உட்படுத்துமாறும் அவர் கோரியுள்ளார். இதற்கிடையில், டெங்கு மற்றும் இன்ஃப்ளூயன்ஸா பி வைரஸுடன் தொடர்புடைய பிற நோய்களிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
