காலிமுகத்திடலில் மேற்கொள்ளப்பட்ட எழுமாறான சோதனையில் ஒன்பது பேருக்கு தொற்று!
கொழும்பில் காலிமுகத்திடலில் இன்று மேற்கொள்ளப்பட்ட எழுமாறான என்டிஜென் சோதனைகளின் போது ஒன்பது கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டனர்.
காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
இதேபோன்று பொது இடங்களில் அதிகாரிகள் தொடர்ந்து என்டிஜென் சோதனைகளை மேற்கொள்வார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், நேற்று மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுபவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட என்டிஜென் சோதனைகள் மூலம் மேலும் 13 தொற்றாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி கடந்த டிசம்பர் 18 முதல் நேற்று வரை மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறுவோர் மத்தியில் இருந்து மொத்தம் 74 பேர் கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளதாக அஜித் ரோஹன தெரிவித்தார்.
மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவோர் மத்தியில் மேற்கொள்ளப்படும் என்டிஜன் எழுமாறான சோதனைகள் ஜனவரி 5ம் திகதி வரை தொடரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்