புளியங்குளம் - கல்மடு கிராமத்தில் 13 பேருக்கு தொற்று உறுதி! கிராமம் முடக்கம்
வவுனியா - புளியங்குளம், கல்மடு கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 13 பேர் கோவிட் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதையடுத்து குறித்த கிராமம் பொலிஸாரால் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
கல்மடு கிராமத்தில் சிலருக்குக் காய்ச்சல் இருப்பதாக வவுனியா வடக்கு சுகாதார பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று எழுமாறாக அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த கிராமம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதுடன், பொலிசார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையில் புளியங்குளம் கல்மடு கிராமத்தில் 35 குடும்பங்கள் உள்ளன.
அதில்19 குடும்பங்களில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 13 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன்,கிராமம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
10 நாட்களின் பின்னர் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுத் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரமே குறித்த கிராமம் முடக்க நிலையிலிருந்து விடுபடும் எனச் சுகாதார பிரிவினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.










தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
